Friday, June 1, 2012




Yoga is said to be as old as civilization, there is no physical evidence to support this claim. Earliest archaeological evidence of Yoga's existence could be found in stone seals which depict figures of Yoga Poses. The stone seals place Yoga's existence around 3000 B.C.

Scholars, however, have a reason to believe that Yoga existed long before that and traced its beginnings in Stone Age Shamanism. Both Shamanism and Yoga have similar characteristics particularly in their efforts to improve the human condition at that time. Also, they aim to heal community members and the practitioners act as religious mediators. Though we know Yoga as focusing more on the self, it started out as community-oriented before it turned inward.

For a better discussion of the history of Yoga, we could divide it into four periods: the Vedic Period, Pre-Classical Period, Classical Period, and Post-Classical Period.

Friday, July 30, 2010

யோக சித்திகளைப்..................................

யோக சித்திகளைப் பெறக் கருவியாயிருக்கும் உடம்பை அழியாதபடி நோயின்றிக் காக்கும் வழிகளைக் காய சித்தி என்ற தலைப்பிலும், உடம்பைப் பக்குவப்படுத்தவேண்டிய முறையை வார சரம், வார சூலை, அமுரி தாரணை, ஆயுள் பரீட்சை, கால சக்கரம் முதலிய தலைப்புகளாலும் விளக்கிப் பின் கேசரி யோகம், பரியங்க யோகம், சந்திர யோகம் முதலியவற்றை விளக்கிப் பிறகு சிவயோகங்கள் எல்லாவற்றினும் அட்டாங்க யோகமே சிறந்தது என்றும் முடித்துள்ளார்.

கேசரி யோகம் என்பது அடயோகத்தின் பாற்படும். கடினமானது. எல்லோரும் பயிற்சி செய்ய இயலாதது.

பரியங்க யோகம் இல்லாளுடன் கூடிச் செய்வது; இது கருத்தொருமித்த காதலனும் காதலியும் கூடிச் செய்வது. இதுவும் எல்லோருக்கும் இயல்வதன்று. சுந்தரர், பரவையார், சங்கிலியாருக்கும், திருவள்ளுவர் வாசுகிக்கும் ஏற்றது.

சந்திரயோகம் என்பது: சந்திரன் கலை 16, சூரியன் கலை 12, அக்கினி கலை 64, தாரணை கலை 4, ஆக 96 கலைகளையும் அறிந்து வளர்பிறை, தேய்பிறைகளில் பயிலப்படும் யோகம்.

இவற்றுள் அட்டாங்கயோகமே சிறந்தது.

எண்வகை யோகங்களைக் கூறுவது

மூன்றாம் தந்திரம்:


இது எண்வகை யோகங்களைக் கூறுவது. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன அவை.
தவிர்க்க வேண்டிய கெட்ட பழக்கங்களை விடுதல் இயமம் எனப்பெறும்.
கடைப்பிடிக்க வேண்டிய நற்பழக்கங்களை மேற்கொள்ளுதல் நியமம் எனப்பெறும்.
யோகம் பயில்வோர் அமர்ந்திருக்கும் நிலை ஆசனம் எனப்பெறும்.
மூலாதாரத்தில் மூண்டெழுகனலைப் பிராண வாயுவினால் எழுப்பி முறைப்படுத்தும் நிகழ்வே பிராணாயாமம் எனப்படும்.
மனத்தைப் பொறி வழி போகவிடாது அகமுகமாக ஆறு ஆதாரங்களில் நிறுத்துதல் பிரத்தியாகாரம் எனப்படும்.
பொறுமை தாரணை எனப்படும்.
இடையறாது நினைத்தல் தியானம் எனப்படும்.
இறையுடன் கலத்தல் சமாதி எனப்பெறும்.

Friday, July 3, 2009

அட்டாங்க யோகத்தின் படினிலைகள்


“இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.
இயமம்,நியமம்,ஆசனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை,தியானம்,சமாதி ஆகியவை பிறப்பறுக்கும் வாயிலாகிய ஞானத்தைப் பயக்கும்.
இயமம்
புலன்களினால் விளையும் இன்பம் நிலையற்றெதென உணர்ந்து,தீயவற்றில் மனம் செல்லாது கட்டுப் படுத்துதல்.
“கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லானியமத் திடையில்நின் றானே.
ஓருயிரையும் கொல்லாதவன்,பொய் சொல்லாதவன், திருடாதவன், பிறரால் மதிக்கப்படும் குணம் உடையவன், நல்லவன், அடக்கமுடையவன்,நடுநிலை தவறாதவன், பகிர்ந்துண்பவன்,குற்றமற்றவன்,கள்ளுண்ணாதவன்,காமம் இல்லாதவன், ஆகிய இந்த இலக்கணக்கங்கள் உடையவனே இயமத்தான்.

கொல்லாமை, வாய்மை,கள்ளாமை,காமமின்மை, பொறையுடமை உறுதியுடமை,தயை,நேர்மை,குறைவாக உண்ணல்,தூய்மை இப்பத்தும் இயமம்.

நியமம் தொடரும்..................

Tuesday, May 19, 2009

அருள்ஒளியாய்





ஆயகலைகள்மொத்தம் கணக்கெடுத்தோர்
அறுபத்தி நாலுஎன்றார் அனைத்தும் கற்றும்
காயகற்ப மெனும்கலையைக் கற்கா விட்டால்
கற்றதெல்லாம் மண்புக்கும் உடல்வி ழுந்தால்
மாயமெனும் காந்தம்உயிர் வித்து மூன்றில்
மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்
தீயவினை கள்கழிய உலகுக் கென்றும்
தெளிவான அருள்ஒளியாய் நிலைக்கும் ஆன்மா


கறைபோக்கி வித்ததனை உறையச் செய்யும்.
காயகற்பப் பயிற்சியினால் உளநோய் நீங்கும்
நிறைமனமும் ஈகையோடு பொறுமை கற்பு
நேர்நிறையும் மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும்
இறையுணர்வு விழிப்புநிலை அறிவுக் கூர்மை
இனியசொல் எண்ணத்தின் உறுதி மேன்மை
மறைபொருளாம் மனம் உயிர் மெய் யுணர்வு கிட்டும்.
மாதவமாய்ப் பிறப்பிறப்புத் தொடர் அறுக்கும்!